Posted by : Author Saturday, 29 October 2016


ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவியாகும், ஆனால் அந்த கணத்தில் ஏற்படும் வலிகளுக்கு பயந்து, ஒரு சில பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தள்ளிப் போடுகின்றார்கள்.

எனவே கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது, அதிகப்படியான வலியை குறைத்து சுகப்பிரசத்தை ஏற்படுத்த ஹிப்னோபெர்த்திங் முறையானது பெரிதும் உதவியாக இருந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

ஹிப்னோபெர்த்திங் முறையின் நோக்கங்கள்

ஹிப்னோபெர்த்திங் முறை என்பது ஒரு வித்தியாசமான ஹிப்னாடிசம், தியானம் மற்றும் ஹிப்னாடிஸ் போன்ற முறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

இந்த ஹிப்னோபெர்த்திங் சிகிச்சை முறையில், கர்ப்பிணி பெண்களின் மனதை ஒருநிலைப்படுத்தி, தியானம் போன்று ஆழ்ந்த நிலைக்கு கொண்டுசெல்லாமல், அவர்களை மனதளவில் உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்த முறையானது, கர்ப்பிணி பெண்களின் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.


ஏனெனில் பிரசவத்தின் போது, ஏற்படும் வேதனைகள் மற்றும் அதன் வலிகளை பற்றிய சோதனைகளை அதிகமாக நம் மனதில் நினைப்பதால், பிரசவ வலிகளின் வீரியம் மென்மேலும் அதிகரிக்கும்.

எனவே ஹிப்னோபெர்த்திங் முறையானது, குழந்தை பிறந்ததும் பெண்கள் அடையும் சந்தோஷத்தை, அந்தக் குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போதே உணர வைக்கிறது.

மேலும் இந்த முறை குழந்தை பெற்ற பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் முதுகுவலி, மூட்டுவலி போன்ற உடம்பு வலிகளை நீக்கி, தாய்மார்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -