Posted by : Author Thursday, 25 February 2016


சொக்லேட் சாப்பிட்டால் அறிவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம், லக்ஸம்பர்க் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து, 23 முதல் 98 வரையிலான வயது கொண்ட 1000 பேரினை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

சொக்லேட் உண்பதால் அவர்களது மூளையில் ஏற்படும் மாற்றங்களை அளவிட, அந்த 1000 பேரும் பல்வேறு வகையான அறிவுத் திறன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அந்தப் பரிசோதனைகளில், வரத்திற்கு ஒருமுறையோ அல்லது அதற்கு மேலோ சாக்லெட் சாப்பிடுவதால் வடிவங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், உடனடி நினைவாற்றல், பரிசோதித்தல், சிறந்த தீர்வு காணுதல் போன்ற மூளையின் பல்வேறு செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -