Posted by : Author
Sunday, 26 February 2017
தற்போதைய காலத்தில் வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரையும் தாக்குகின்றது புற்றுநோய்.
குறிப்பாக மார்பக மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கலந்து வெளியேறினால், அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான முதல் அறிகுறிகளில் ஒன்றாகும்.
சிறுநீர் பாதை தொற்றுகளுக்களான, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல், வலி அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வுகள் சிறுநீர்ப்பை புற்றுநோயிக்கான அறிகுறியாகும்.
சிலருக்கு சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டு, ஆனால் சிறுநீர் வராமல் இருந்தாலும், அது சிறுநீர்ப்பை புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒருவரின் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி, அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தாலோ அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
பசியின்மை, எடைக் குறைவு மற்றும் மிகுதியான சோர்வு இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் கூட, அது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஏனெனில் இதற்கு, நமது உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள் இவைதான்! அலட்சியப்படுத்த வேண்டாம்...

