Posted by : Author Tuesday, 6 September 2016


புற்று நோய் வகைகளுள் ஒன்றான குருதிப் புற்று நோயினை முற்றாகக் குணப்படுத்த முடியாது எனினும் அதன் வலுவினைக் குறைப்பதற்கான பல்வேறு சிகிச்சைகள் காணப்படுகின்றது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கலங்கள் வலுவிழப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Comprehensive Cancer Center, University of North Carolina School of Medicine ஆகியவை மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை குருதியை முற்றாக மாற்றம் செய்யும் சிகிச்சையும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ் ஆய்விற்காக குருதிப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழுவினரின் தகவல்கள் 30 வருடங்களாக சேகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்டெம் செல்களில் உள்ள p16 எனப்படும் செய்தி பரிமாற்றும் RNA (mRNA) இலுள்ள புரதத்தின் அளவு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இதன்போது (mRNA) இலுள்ள புரதத்தின் அளவு அதிகரித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -