Posted by : Author Tuesday, 24 May 2016


ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எதற்காக தூங்குகிறோம்?

நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது.

தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும் ஒன்று.

மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு, தொடர்ந்து சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. இச்செயலுக்கு, ஓய்வு தேவை.

ஒய்வு இருந்தால் தான் மறுநாள் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிடில், செயல்திறன் குறைந்துவிடும். எனவே கட்டாயம், எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. தூக்கம் நன்றாக இருந்தால், பல வேலைகளை சிறப்பாக செய்வதற்கான சூழலை உடலும், மனமும் உருவாக்கிக் கொள்கிறது.

ஆனால், தூக்கத்தை தவிர்ப்பவர்கள் நெஞ்சுவலி, தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி மருத்துவர்களை சந்திக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் ஆபத்து, தூக்கமில்லாமல் இருந்தாலும் ஆபத்து, ஆகவே அளவோடு தூங்கி நிறைவோடு வாழுங்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -