Posted by : Author Thursday, 31 March 2016

திடமான உணவு சாப்பிட்டவுடன் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது. இது உடலின் இயல்பான ஆரோக்கிய நிலையை பாழாக்கி விடும்.

வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, சாப்பிட்ட உணவு ஜீரணமாவதற்காக உடலின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக மூளைப் பகுதிகளிலிருந்து ரத்தம் இரைப்பையைச் சென்றடைகிறது. மேலும் அதன் காரணமாக மூளையிலும் பிற உடல் உறுப்புகளிலும் அயர்வு தோன்றும்.

இவ்வாறு உடலின் தலைமை உறுப்பான மூளையும், பிற உறுப்புகளும் அயர்வு கொண்டிருக்கும் நிலையில் பிடிவாதமாக கடினமான உழைப்பில் ஈடுபட்டால் உடல் உறுப்புகளின் இயல்பான செயலாற்றல் குன்றி, அவை நாளடைவில் செயல் திறனை இழந்து விடக்கூடும்.

வயிறார சாப்பிட்ட உடன் தூக்கம் தோன்றுவதற்கு இதுதான் காரணம் என்றும், வயிறு நிறைய உணவு உண்ட காலை சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது கூட நல்லது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -