Posted by : Author Wednesday, 7 October 2015


தமிழ்த் திரைப்­ப­ட­மொன்றில் இடம்­பெற்ற பாடலின் இடை­வ­ரிகள் பின்­வ­ரு­மாறு அமை­கின்­றன. “காட்டு விலங்கு எல்லாம் கொழுத்­தால்தான் மதிப்பு, சாமி, துறவி எல்லாம் மெலிந்­தால்தான் மதிப்பு” என ஒலிக்கும் அப்­பாடல் வரிகள், உலக வாழ்­வி­யலில் மதிப்­பினைப் பெறு­வ­தற்கு ஒவ்­வொன்­றிற்கும் என்­னென்ன தகை­மைகள் இருக்­க­வேண்டும் எனச் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

காட்டில் உண­விற்­காக வேட்­டை­யா­டப்­படும் விலங்கு கொழுத்து இருந்தால் அதிக இறைச்சி கிடைக்­குமே என்ற உலகின் எதிர்­பார்ப்­பி­னையே தரப்­பட்ட பாடல்­வ­ரி­களின் முதல் வரி குறிப்­பி­டு­கின்­றது.

தற்­போது உண­விற்­காக காட்டு விலங்­குகள் வேட்­டை­யா­டப்­ப­டு­வது சட்­டத்தால் தடுக்­கப்­பட்­டுள்­ளதால், விலங்கு வேளாண்­மை­யாக கோழி, மாடு மற்றும் பல விலங்­குகள் வளர்க்­கப்­பட்டு, அவற்­றினைக் கொன்று இறைச்­சி­யினைப் பெறும் நடை­முறை தற்­போது காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றாக வளர்க்­கப்­படும் விலங்­கு­களை கொழுக்க வைப்­ப­தற்­காக சிறப்புத் தீவ­னங்­களும் அவ்­வி­லங்­கு­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

மனி­த­ருக்கு நோய்கள் வரு­வ­து­போல விலங்­கு­க­ளுக்கும் எதிர்­பா­ராத நோய்கள் ஏற்­பட்டு அவை இறந்து­ விட்டால், அது விலங்கு வேளாண்­மை­யா­ள­ருக்கு பாரிய நட்­டத்­தினை விளை­வித்­து­விடும். இதற்­காக மிருக வைத்­தி­யரின் பரிந்­து­ரை­யு­ட­னான மருத்­துவப் பரா­ம­ரிப்­புக்கள் பண்­ணை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­வது அவ­சியம். அதன் பின்னர், வழங்­கப்­பட்ட மருந்­து­களின் தாக்கம் அகன்ற பின்­னரே பெறப்­படும் விலங்கு உண­வுகள் நுகர்­விற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும்.

இலா­பத்­தினை மாத்­திரம் நோக்­காகக் கொள்ளும் விரை­வான வர்த்­தக உலகில் இந்த விட­யங்கள் தொடர்­பாக உண­வ­கங்­களின் கொள்­கைகள் எவ்­வா­றுள்­ளன என்­பது குறித்து ஓர் ஆய்வு அமெ­ரிக்­காவில் நடத்­தப்­பட்­டது.

இதில், அமெ­ரிக்­காவின் இயற்கை வள பாது­காப்புப் பேரவை, பூமியின் நண்­பர்கள் நிறு­வனம், நுகர்வோர் அமைப்­புக்கள், பொதுச் சுகா­தார கண்­கா­ணிப்­ப­கங்கள் என 7 நிறு­வ­னங்கள் இணைந்து பணி­யாற்­றின. அமெ­ரிக்­காவில் பிர­ப­ல­மான, அசைவ உண­வு­களை வழங்கும் 25 விரைவு உண­வ­கங்கள் இந்த ஆய்­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்த ஆய்வின் பிர­காரம் இரு விரைவு உண­வ­கங்கள் மாத்­திரம் விலங்­கு­க­ளுக்­கான நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் தொடர்­பாக இறுக்­க­மான படி­நி­லை­களைக் கடைப்­பி­டிப்­பது அவ­தா­னிக்­கப்­பட்டு உயர்­தர (A) நிலையை அடைந்­துள்­ளன.

அசைவ உண­வு­களை விற்­பனை செய்யும் 20 உண­வ­கங்கள் ஆய்வில் புள்­ளி­யி­டலில் கடை­நி­லையைப் (F) பெற்­றுள்­ளன. கடை­நிலை தரத்தில், இங்கு பிர­ப­ல­மாக இயங்கும் பல்­தே­சிய விரைவு உண­வ­கங்கள் சில­வற்றின் பெயர்­களும் உள்­ள­டங்­கி­யுள்­ளன என்­பது இங்கே குறிப்­பி­டத்­தக்­கது.

சில நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டா­தி­ருந்த வேளையில், நுண்­ணு­யிர்­களின் தாக்­கத்­தினால் மனி­தர்கள் கொத்துக் கொத்­தாக இறக்­க­வேண்­டிய நிலை இருந்­தது.

தற்­போ­துள்ள மனி­த­ருக்­கான மருத்­துவ சிகிச்­சை­களில், உரிய பிர­மா­ணங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் வழங்­கப்­ப­டா­து­விடின், குறிப்­பிட்ட நுண்­ணு­யி­ரிகள் வீரியம் கொள்­வ­தற்கு சந்­தர்ப்பம் ஏற்­ப­டு­கின்­றது.

மேலும், நுண்­ணு­யிர்­களின் சந்­த­திகள் இக்­கொல்­லி­க­ளுக்கு எதி­ராகக் கூர்ப்பு அடையும் பட்­சத்தில் நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் பய­னற்­ற­வை­யாக மாறி­வி­டக்­கூடும்.
ஆனால், விலங்கு வேளாண்­மையில் வளர்ப்பு விலங்­கு­களின் இழப்­பினைத் தடுப்­ப­தற்­காக நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் உரிய பிர­மா­ணங்­க­ளின்றி, கட்­டுப்­பா­டற்ற வகையில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது இடம்­பெ­று­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இவ்­வா­றான பிர­யோ­கங்கள் கார­ண­மாக, பண்­ணையில் இருந்து பெறப்­படும் விலங்கு உண­வு­களை மனிதர் நுக­ரு­கையில், அந்த நுண்­ணு­யிர்க்­கொல்­லி­களும் மனி­தரை வந்­த­டை­கின்­றன.

இவ்­வாறு வந்­த­டையும் குறைந்த செறி­வான நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் கார­ண­மாக, மனி­தரைத் தாக்கும் நுண்­ணங்­கிகள் கூர்ப்­பி­னூ­டாக வீரி­ய­ம­டை­வ­தற்­கான சந்­தர்ப்­பத்­தினை வழங்­கு­வ­தாக இந்­நி­லைமை அமை­கின்­றது. அவ்­வாறு கூர்ப்­ப­டைந்தால், தற்­போ­துள்ள நுண்­ணு­யிர்க்­கொல்­லி­களின் பிர­யோகம் பய­னற்­ற­தாக மாறி பாரிய உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு வழி­வ­குக்கும் என அஞ்­சப்­ப­டு­கின்­றது. பகட்­டாகத் தோற்றும் உண­வ­கங்­களில் பல­வற்றில் இவ்­வி­டயம் குறித்து அக்­கறை இல்­லா­ம­லி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­யது.

ஆய்­வு­களின் பிர­காரம் Panera மற்றும் Chipotle ஆகிய உண­வ­கங்கள் மாத்­திரம் A தரச் சித்­தி­யையும், Chick-fil- A உண­வகம் B தரச் சித்­தி­யையும் பெற்­றுள்­ளன உண­வ­க­மான Chipotle இல் பரி­மா­றப்­படும் இறைச்சி வகை­களில் 90 சத­வீ­த­மா­னவை நுண்­ணு­யிர்க்­கொல்­லிகள் அற்­றவை என்­பதை இவ்­வு­ண­வகம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மற்­றைய உண­வ­க­மான Panera கோழி மற்றும் பன்றி இறைச்­சி­களை 100 சத­வீதம் நுண்­ணு­யிர்க்­கொல்லி இன்றி வழங்­கி­வரும் அதே­வேளை, மாட்­டி­றைச்சி அவ்­வா­றில்லை எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எதிர்­வரும் 2019 ஆண்­டி­லி­ருந்து 100 சத­வீத நுண்­ணு­யிர்க்­கொல்­லி­யற்ற விலங்கு உண­வு­களை வழங்க Chick–fil–Aஉண­வகம் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வதும் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏனைய 20 உண­வ­கங்­களும் பண்­ணை­க­ளி­லி­ருந்து பெறப்படும் விலங்கு உணவுகளின் தரம் தொடர்பாக அதிக அக்கறைகளோ அல்லாவிடின் கொள்கைகளோ இல்லாமையால், சித்தியின்மை( F) என அவைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

மனித குலத்தினை மாபெரும் இக்கட்டிற்கு அழைத்துச் செல்லவல்ல இந்நிலைமை குறித்து அனைவரும் விழிப்படைவது அவசியம். விலங்குப் பண்ணைகளின் நுண்ணுயிர்க்கொல்லிப் பாவனை தொடர்பில் அக்கறை கொள்ளாத உணவகங்களை நுகர்வோர் புறக்கணித்து, விலங்குப் பண்ணைகளின் மருத்துவ நடைமுறைகளில் இறுக்கமான ஒழுங்கினைக் கடைப்பிடிப்பதற்கான அழுத்தத்தினை வழங்கவேண்டும்.

அவ்வாறு பின்பற்றாதுவிடின் கூர்ப்படையும் நுண்ணுயிர்களால் விளையும் மனிதப்பேரழிவுகளை மருத்துவத்தினால் தடுக்க இய லாது போய்விடும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -