Posted by : Author
Friday, 2 June 2017
வாய் துர்நாற்றத்தை இயற்கையான வழியில் குணமாக்க அற்புதமான சில தீர்வுகள் இதோ..
வாய் நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
- இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் போட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நீரால் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
- பார்ஸ்லி இலைகளை வாயில் போட்டு மென்று வந்தாலே வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலனைக் காணலாம்.
- ஏலக்காய் விதைகளை தினமும் மென்று வருவதன் மூலம் இனிமையான, சுத்தமான சுவாச நிலையை பெறலாம்.
- கிரம்பை மென்று வாயில், வெற்றிலையை போல அடக்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் உடனே போய்விடும்.
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்த கலவையால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால், வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.
- கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் என்பதால், இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.
தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது, நாக்கையும் சேர்த்து தவறாமல் சுத்தம் செய்து வந்தாலே, கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்கிவிடலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள்......

