Posted by : Author Friday, 2 June 2017


வாய் துர்நாற்றத்தை இயற்கையான வழியில் குணமாக்க அற்புதமான சில தீர்வுகள் இதோ..

வாய் நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

  • இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் போட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நீரால் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
  • பார்ஸ்லி இலைகளை வாயில் போட்டு மென்று வந்தாலே வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலனைக் காணலாம்.
  • ஏலக்காய் விதைகளை தினமும் மென்று வருவதன் மூலம் இனிமையான, சுத்தமான சுவாச நிலையை பெறலாம்.
  • கிரம்பை மென்று வாயில், வெற்றிலையை போல அடக்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் உடனே போய்விடும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்த கலவையால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால், வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.
  • கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் என்பதால், இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.
குறிப்பு

தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது, நாக்கையும் சேர்த்து தவறாமல் சுத்தம் செய்து வந்தாலே, கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்கிவிடலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -