Posted by : Author
Saturday, 6 May 2017
உலகில் இன்னும் பல நோய்களுக்கு மருந்துகளும் நோயினை தடுப்பதற்கான தீர்வுகளும் கண்டறியப்படவில்லை. அத்தகைய நோய்களுள் குணப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்று இரத்தம் உறையா நோய்.
இந்நோய் உள்ளவர்களுக்கு தீவிர சிராய்ப்புண், இரத்தம் கலந்த மலம், மிகுந்த சோர்வு, மூக்கில் இரத்தம் ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
இந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் இரத்த கசிவு நிற்பது கடினம். மரபணு கோளாறினால் ஏற்படும் இந்நோயினை பற்றிய பல உண்மைகள் பெரும்பாலானோர்க்கு தெரியாது.
இரத்த உறையா நோயின் காரணம்
- இரத்த உறைய காரணமாக புரோட்டீன்களின் அளவு இரத்தத்தில் குறைவாக இருந்தால் இந்த பிரச்சனையானது ஏற்படும்.
- பெரும்பாலும் எச்.ஐ.வி. வைரஸினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த பிரச்சனை அதிகளவில் உண்டாகிறது. இத்தகையவர்களுக்கு இரத்தம் மற்றும் பிளாஸ்மாவை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும்.
- 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவை சேர்ந்த அரச குடும்பத்தினர் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இரு பாலினத்தவரையும் பாதிக்கும் இந்நோய் அதிகளவில் ஆண்களையே அதிகமாக தாக்குகிறது.
- தந்தையினால் ஒரு பெண்ணுக்கு இந்நோய் பாதிப்பானது இருந்தால் அவள் குழந்தையையும் பாதிக்கும்.
- இந்நோயினை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இதற்கான மருந்துகளை இன்னும் கண்டறிய முடியவில்லை.