Posted by : Author Tuesday, 20 September 2016


பொதுவாக துர்நாற்றம் என்பது நம் உடலில் ஏற்படும் அதிக வியர்வையினால் வரக்கூடியது. அதனால் மற்றவரின் பக்கத்தில் செல்ல முடியாத அளவுக்கு கெட்ட வாடையாக வீசும்.

அதனை போக்க எந்த முயற்சிகள் மேற்கொண்டாலும் முடிவில் தோல்வியே கிடைக்கும்.

எனவே உடல் துர்நாற்றம் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

நாம் தினமும் உண்ணும் உணவுகளில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், உடலில் இருந்து கீட்டோன்கள் வெளியேற்றிவிடும். இதனால் நம் உடம்பில் வியர்வை அதிகமாகி உடல் துர்நாற்றம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட காரணமாக உள்ளது.
வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புகளுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியிலிருந்து வெளிப்படுகிறது. இதனால் பலவையான வியர்வைகள் ஏற்பட்டு உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம் காரணமாக தோன்றும் வியர்வையானது மிகவும் மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
மாட்டு இறைச்சியை சாப்பிடும் போது, அதில் உள்ள அமினோ ஆசிட், நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும். இதனால் செரிமானம் தாமதமாக நடைபெற்று அதிலிருந்து வெளிப்படும் வாயு மிகவும் மோசமான துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.

நம் அன்றாட வாழ்வின் உணவில் காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், உடலில் வியர்வை அதிகமாகி துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும். இதனால் கொழுப்புகள் எரிபொருளாக உடைக்கப்பட்டு, அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசும். ஏனெனில் அவர்கள் உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் அவைகள் சருமத்துளைகளின் வழியே வெளியேற்றப்படும். இதனால் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -