Posted by : Author Friday, 5 August 2016


சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவபொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்றவியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரைவாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும்.நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில்இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்தவகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்துஅதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின்காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல்நீங்கும்.

முருங்கை காய் சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கவல்லது.ஆதலால் இதை உண்டால் சிறுநீராகம் பலப்படும்தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகுரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால்உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு,தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகைஉள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும்.முடி நீண்டுவளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும்.கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகியவியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்தசாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல்,வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும்பயன்படுகிறது.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயைஉணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப்காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிபதை ஊக்குவிக்கும்.பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டுதயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைகீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைஅகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -