Posted by : Author
Wednesday, 22 June 2016
தற்போது பாவனையிலுள்ள ஆஸ்டியோபோரோசிஸ் மாத்திரை மார்பக புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை நிறுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாத்திரையானது பெண்களில் 87 வீதமான மார்பக புற்றுநோயினையும், 50 வீதமான கருப்பை புற்றுநோயினையும் போக்கவல்லது.
இதன் தொழிற்பாடு BRCA1 பரம்பரையலகில் ஏற்படும் விகாரத்தை தடுப்பதன் மூலம் விரும்பத்தகாத கலங்களின் பெருக்கத்தை தடுக்கிறது.
ஆரோக்கியமான நிலையில் BRCA1, BRCA2 பரம்பரையலகுகள் புதிய சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் புரதங்களை உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட DNA யினை புதுப்பித்து கலத்தினது பாரம்பரிய திரவியத்தை நிலையாக பேணுகின்றது.
குறித்த பரம்பரையலகுகள் விகாரமடையும் போது தவறான புரதங்களை தோற்றுவிக்கின்றன. அத்துடன் DNA இல் எற்படும் பாதிப்புக்களை திருத்த முடியாமல் போகின்றது.
இதன் விளைவாக புதிய கலங்கள் உருவாகி கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய்கள் உருவாக காரணமாகின்றது.
மேற்படி குறித்த மருந்தானது சோதனையின் போது புதிய சதைகளின் வளர்ச்சியை தடுப்பது அல்லது அதன் வளர்ச்சியை தாமதிப்பது இனங்காணப்பட்டது.
எனவே இது வருங்காலத்தில் ஆபத்தான பெண்களில் மார்பகப் புற்றுநோயை விரட்ட பாரிய அளவில் பயன்படும் என குறித்த ஆய்வுக் குழு தெருவிக்கின்றது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும்.... »
- ஆஸ்டியோபோரோசிஸ் மாத்திரை மூலம் இனி மார்பக புற்றுநோய்க்கு முடிவு கட்டலாம்....

