Posted by : Author
Wednesday, 22 June 2016
Alzheimer நோயாளிகள் 10 பேரில் மேற்கொள்ளப்பட்ப சிறிய சோதனை அவர்களின் ஞாபக சக்தி இழப்பு மற்றும் மனநல குறைபாட்டை மீட்கக்கூடியதாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.
அதோடு ஒரு சில மாதங்களிலேயே அவர்களில் மொழி விருத்தி, வேறு மொழிகளை பேசும் திறன், மூளை விருத்தி என்பனவும் காணப்பட்டிருந்தது.
MEND என அழைக்கப்படும் அந்த சிகிச்சை உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி, நித்திரை பழக்கவழக்கம், மருந்து மற்றும் விட்டமின் ஊட்டல், மூளை தூண்டுதல் உட்பட 36 காரணிகளை அடிப்படையாக கொண்டது.
இச்சிகிச்சை 5 தொடக்கம் 24 மாத காலமாக வழங்கப்பட்டிருந்ததுடன் பெரும்பாலானவர்களில் சாதகமான மாற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன.
மேற்படி நோயானது மத்திய, வயதான காலங்களில் மூளை சீரழிவு காரணமாக ஏற்படக்கூடிய நோய் நிலைமையாகும்.மனநிலை நோய் தொடர்பான ஆராய்ச்சி இதுவே முதல் தடவை என மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- Alzheimer நோயினால் உண்டாகும் ஞாபக சக்தி இழப்பிலிருந்து இனி மீள முடியும்...

