Posted by : Author Sunday, 8 May 2016


மரியானா அகழியின் ஆழம் சம்மந்தமான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கண்டு ஆச்சர்யமடைந்த புதுவித ஜெல்லி மீன்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அப்படியென்ன ஆச்சர்யம் அம் மீனில்? ஆம், தன் வாழ்வின் இறுதிவரை தொடரும் அதன் பயணம், இதுவரை மனிதன் கண்டிருக்க வாய்ப்பேயில்லை.

பூமியில் ஏறத்தாழ 1 டிரில்லியன் இனங்கள் இருந்தாலும், அவற்றில் 99.999 வீதமான இனங்கள் மட்டுமே கண்டுபிடித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக ஓர் இனம் அறியப்படும் போது அழகு உணர்வும், அதன்மீதான ஆச்சர்யமும் உண்டாகத்தான் செய்கின்றன.


இவ்விசித்திர மீனானது கடல் தளத்திலிருந்து ஏறத்தாள 3,700 மீட்ர் ஆழத்தில் மேற்கு மரியானாவில் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இம் மீனானது கொறொட்டா இனத்தை சேர்ந்ததாக இருக்காலம் எனவும், அவ் இனம் பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ச்சியாக நகரும் இனம் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது பதுங்கியிருந்து இரையை கவ்வும் ஆற்றலுடையது. தனது இரையை எதிர்பார்த்து அசைவின்றி சிலந்தி வலையமைப்பை உருவாக்கி தக்க நேரத்தில் தாக்கும் வல்லமையுடையது.

இதுபோன்ற அரியவகை இனங்கள் நம் கண்ணில் படுவது மிக அரிது. அவ் ஆராய்ச்சியாளர் அதிர்ஷ்டசாலியாகத்தான் பார்க்கப்பட வேண்டியவர், தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் இருந்தமைக்காக.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -