Posted by : Author Tuesday, 31 May 2016


நீரிழிவு நோயாளிகள் அதன் வீரியத்தை குறைக்க ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் குடிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 1 பெரியது
கிரீன் ஆப்பிள் / ரெட் ஆப்பிள் – 1
இஞ்சி – 2 செ.மீ., துண்டு,
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்
கைகளால் அதனை அழுத்தி பாகற்காயை மென்மையாக்கும்
பின்பு அதனை 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்
ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும்
அதை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
மீண்டும் அவற்றை பாதியாக வெட்டவும், விதைகளை நீக்கவும்
பின்பு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
இப்போது பாகற்காய் மென்மையாகி விட்டது
பாகற்காயை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாறினை நீக்கி விடவும்
பிழியப்பட்ட பாகற்காயினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
அதனுடன் ஆப்பிள், இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்
பின்பு அதனை வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு , உப்பு சேர்க்கவும்
பின்பு குளிர்ந்த நீர் சேர்த்து, டம்ளரில் விட்டு குடிக்கலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -