Posted by : Author Friday, 4 March 2016


 அன்றாடம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
எனவே, ஆரோக்கிய வாழ்க்கைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்,

ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், ஃபிளாவனாய்டுகள், நார்ச்சத்து போன்றவை நீரிழிவு, நுரையீரல், பெருங்குடல், மார்பக, கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் பயனளிக்கிறது.



தக்காளி

தக்காளியில் விட்டமின் சி, ஈ, கே, எ சத்துக்களும், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம் போன்றவை உயர்ரக அளவில் கிடைக்கிறது. தக்காளி சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள, இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.



மாதுளை

இதில் அதிகளவில் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. மேலும் மாதுளையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோயை எதிர்த்து போராடும் தன்மையுள்ளவை.

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்றவர்கள் மாதுளையை உட்கொள்வதால் சிறந்த தீர்வுக் காண முடியும்.



செர்ரி

செர்ரியில் அந்தொசியனின் (anthocyanin) எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இது கீல்வாதம், நீரிழிவு புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து போராட நன்கு உதவுகிறது. செர்ரிகளில் பொட்டாசியம், வைட்டமின் எ, நார்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.



தர்பூசணி

தர்பூசணி உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. விட்டமின் எ, பி 6, சி மற்றும் அமினோ அமிலம் சத்து போன்றவை இதில் அதிகம். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் எனும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.



சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயில் கேப்சாய்சின் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது, இது இரத்த நாளங்களை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -