Showing posts with label கண்டுபிடித்தனர். Show all posts
நீர்ச்சூழலில் வாழும் தேனீக்கள்: முதன் முறையாக கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!
Saturday, 10 December 2016
Posted by Author
Tag :
கண்டுபிடித்தனர்
பூச்சி இனத்தைச் சேர்ந்த தேனீக்கள் பொதுவாக தரையில் உள்ள மரங்களில் மட்டுமே வாழக்கூடியன.
இவை பூக்களில் இருந்து குடிக்கும் தேனை சேகரிக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.
இவ்வாறான தேனீக்கள் நீர்க்கீழ் சூழலிலும் காணப்படுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது நீரிற்கு கீழாக இருக்கும் புற்தாவரங்களில் இவ் வகை தேனீக்கள் வாழ்கின்றன.
மேலும் தரையில் வாழும் தேனீக்களைப் போன்றே நீரின் கீழ் வாழும் தேனீக்களும் தேனை உற்பத்தி செய்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு முதல் மெக்சிக்கோவில் உள்ள National Autonomous பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடல்படுக்கையில் காணப்படும் தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்குள்ள தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை அடைவதற்கு நீரை தவிர பிற வழிமுறை ஒன்று இருப்பது உணரப்பட்டது.
இதன் அடிப்படையில் தொடர்ந்த ஆய்வுகளின்போதே நீர்ச் சூழலிலும் தேனீக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
