Showing posts with label ஆரோக்கியம். Show all posts

அண்மைய ஆய்வொன்று அதிகமாக மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிகளை உள்ளெடுப்பதால் சிறுநீரக நோய்கள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றது.

இங்கு பிரதான புரத உணவிற்கும், சிறுநீரக செயற்பாட்டுக்குமிடைப்பட்ட தொடர்பினை ஆராயவேண்டி, ஆய்வொன்று 63 257 சீனவர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சனத்தொகையில் 97 வீதமானோருக்கு சிவப்பு இறைச்சியாக பன்றி இறைச்சி வழங்கப்பட்டிருந்தது.

வேறுவகை புரத மூலமாக கோழி, மீன், முட்டை, பால் வகைகள், சோயா மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டிருந்தன.

வழங்கப்பட்டு 15.5 வருடங்களுக்கு பின்னர் சிவப்பு இறைச்சியானது அதிகம் சிறுநீரக வியாதிகளை தோற்றுவித்திருந்தமை அறியப்பட்டது.

அத்துடன் உட்கொள்ளும் அளவுடன் அதன் தாக்கமும் வேறுபடுவது அவதானிக்கப்பட்டிருந்தது. அதிகளவில் உட்கொண்டவர்களில் இத் தாக்கம், குறைந்தளவில் எடுத்துக்கொண்டவர்களிலும் 40 வீதம் அதிகமாக காணப்பட்டிருந்தது.

அதேநேரம் மற்றைய வகை புரதங்களை உள்ளெடுத்தவர்களில் எந்தவித தொடர்பும் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

சிவப்பு இறைச்சியுடன், மற்றைய வகை புரத உணவுகளை பிரதியீடு செய்ததன் மூலம் இத் தாக்கம் 62 வீதம் வரையில் வீழ்ச்சியடைந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான தகவல்கள் Journal American Society of Nephrology (JASN) எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -